“பட்ட பகலில் துப்பாக்கி முனையில் நகை கடையில் கொள்ளை”… பல லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் ஆபேஸ்… பரபரப்பு சம்பவம்..!!
SeithiSolai Tamil May 05, 2025 12:48 AM

பீகார் மாநிலம் முஜாப்பர்பூர் பகுதியில் அமைந்துள்ள அடகு கடையில் ஊழியர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென 5 பேர் கொண்ட மர்ம கும்பல் கையில் துப்பாக்கியுடன் கடைக்குள் நுழைந்தனர். அதில் ஒருவர் அங்கிருந்த ஊழியர்களை துப்பாக்கியை வைத்து மிரட்டி நகர விடாமல் செய்ததும் அந்த கும்பல் கடையில் இருந்த ரூ.2.5 லட்சம் ரொக்க பணம் மற்றும் ரூ.13 லட்சம் மதிக்கத்தக்க தங்க நகைகளை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் இது தொடர்பாக அடகு கடையின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மர்மகும்பலை தேடி வருகிறார்கள். மேலும் பட்டப்பகலில் துப்பாக்கியை வைத்து மிரட்டி அடகு கடையில் பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.