இது குறித்து சம்மேளன பொது செயலாளர் நரேந்திர ராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “துறைமுகங்களின் வளர்ச்சி,பொருளாதார நலன்களை பாதிக்கும் துறைமுக ஆணைய திருத்த மசோதா 2025-ஐ மத்திய அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மே 20-ம் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
சென்னை, தூத்துக்குடி, மும்பை, கொல்கத்தா, கோவா உள்ளிட்ட 12 துறைமுகங்களில் பணியாற்றும் 20,000 ஊழியர்கள் பங்கேற்பார்கள்” என்று கூறப்பட்டுள்ளது.