தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து காெண்டு சென்னை செல்வதற்காக இன்று காலை தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தந்தார். வாகைகுளம் விமான நிலையத்தில் ஆளுநர் ஆர். என்.ரவியை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், எஸ்பி ஆல்பர்ட் ஜான் ஆகியோர் புத்தகம் வழங்கி வழியனுப்பி வைத்தனர்.