அதிகாலையில் அதிர்ச்சி… அரசு பேருந்து மீது வேன் மோதி 3 பேர் பலி… 10 பேர் படுகாயம்!
Dinamaalai May 06, 2025 05:48 PM

காரைக்குடி தேனாற்று  பாலம் அருகே பால்வேன் மீது இராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து மோதியதில்  பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் பால் வேன் அப்பளம் போல் நொறுங்கி விட்டது. 

இந்நிலையில் அரசு பேருந்தின் முன்பக்கமும் பயங்கரமாக சேதமடைந்துள்ளது.இரு வாகனங்களும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தது. 

இந்நிலையில் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.