இந்தியா - பாகிஸ்தான் இடையிலான முழுமையான போர் நிறுத்தம் நேற்று உடனடியாக அமலுக்கு வந்தது. மாலை 5 மணியுடன் இருநாடுகளை சேர்ந்த முப்படைகளும் தாக்குதலை நிறுத்திக்கொண்டதாக இருதரப்பிலும் அறிவிக்கப்பட்டது.
போர் நிறுத்தத்திற்கு பிறகு இந்தியா மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்திய நிலையில், வெளியுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
பாகிஸ்தான் அத்துமீறி வருகிறது. சண்டை நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் தரப்பு தாக்கியது. அதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்துள்ளது. எல்லையில் விதிமீறி தாக்குதல் தொடர்கிறது. அத்துமீறலை பாகிஸ்தான் தடுக்க வேண்டும்" என்று கூறினார்.
அமைதி பேச்சுவார்த்தைக்கு பிறகு, இந்தியாவுக்குள் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்திய விவகாரகத்தில் பாகிஸ்தானுக்கு விக்ரம் மிஸ்ரி வார்னிங் கொடுத்துள்ளார். எனவே இன்று இரவுக்குள் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்கும் என கூறப்படுகிறது. இதற்கிடையே பிரதமர் மோடி, அஜித் தோவலுடன் அவரச ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
மறுபுறம் இந்தியாவின் பாகிஸ்தான் எல்லை பகுதிகளில் தாக்குதல் காரணமாக இருளில் மூழ்கி உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியா மீது பாகிஸ்தான் ஏன் தாக்குல் நடத்தியது என்பது உறுதி செய்யப்படவில்லை. முன்னதாக, ராணுவ கமாண்டர், ரகு நாயர், எங்களை தாக்கினால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார்.