படித்து வேலைக்கு போங்க….! “அதை” நான் சொல்லவே மாட்டேன்…. சித்திரை முழு நிலவு மாநாட்டில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்….!!
SeithiSolai Tamil May 12, 2025 03:48 AM

பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு தொடங்கியது. இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் மிகப் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டது. இந்த மாநாட்டில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் வந்தனர். விழா தொடக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர் சங்க கொடியை ஏற்றி வைத்தார்.

அதன் பிறகு பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பிறகு 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து விழாவில் பேசிய அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு போ. அதன் பிறகு கட்சிக்கு வா. முதலில் குடும்பத்தை பார். என்னுடைய தம்பிகள் ஒரு வழக்கு கூட வாங்க கூடாது. ஐயா உங்களுக்கு இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்துள்ளார். அதை பயன்படுத்தி படித்து வேலைக்கு செல்லுங்கள் என கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.