நடிகர் மற்றும் காமெடி கில்லாடிகளு சீசன் 3 வெற்றியாளரான ராக்கேஷ் பூஜாரி காலமானார்.
இன்று (மே. 12) கர்நாடக மாநிலத்தின் உடுப்பி மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ராகேஷ் கலந்து கொண்ட போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிர் பிரிந்தது. 'காந்தாரா 2' படப்பிடிப்பை முடித்துவிட்டு அவர் நிகழ்ச்சிக்கு வந்தார். இளம் வயதில் ராகேஷ் மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினரயும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் சிவராஜ் கே.ஆர். பேட் இந்த துயரமான செய்தியை உறுதிப்படுத்தினார். காந்தாரா 2 படப்பிடிப்பை முடித்துவிட்டு ராக்கேஷ் இந்த விழாவில் கலந்து கொள்ள திரும்பியதாக அவர் கூறினார்.
இந்த செய்தி வெளியானதிலிருந்து இரங்கல் செய்திகள் குவிந்து வருகின்றன. காமெடி கில்லாடிகளு நிகழ்ச்சியின் நடுவராக இருந்த நடிகை ரக்ஷிதா உருக்கமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்: “எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ராக்கேஷா… எனது அபிமான ராக்கேஷா… மிகவும் இனிமையான, கனிவான, அன்பான மனிதர்… நம்ம ராக்கேஷா… உன்னை மிஸ் பண்ணுவோம் மக்னே.”
தொலைக்காட்சிக்கு அப்பால், ராக்கேஷ் நாடகம் மற்றும் சினிமாவில் ஒரு சிறந்த வாழ்க்கையை கொண்டிருந்தார். அவர் பைல்வான் மற்றும் இது எந்த லோகவய்யா போன்ற கன்னட படங்களில் தோன்றினார், மேலும் பெட்கம்மி மற்றும் அம்மேர் போலீஸ் போன்ற துளு படங்களில் தனது முத்திரையை பதித்தார்.
நகைச்சுவை உணர்வு மற்றும் தங்க இதயம் கொண்ட பன்முக திறமை கொண்ட கலைஞரான ராக்கேஷ் பூஜாரியின் மரபு அவரது நடிப்பின் மூலமாகவும், திரையிலும் திரைக்கு வெளியிலும் அவர் சம்பாதித்த அன்பின் மூலமாகவும் நிலைத்திருக்கும்.