டொனால்ட் டிரம்ப் அதிரடி : சட்டவிரோத குடியேறிகளுக்கு "லைப் டைம் ஆபர்"..!
Newstm Tamil May 11, 2025 04:48 PM

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றவுடன் முதல் வேலையாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்தவர்களை சொந்த நாடுகளுக்கு விமானம் மூலம் அனுப்பி வைத்தார். கை, கால்களை சங்கிலியுடன் அவர்கள் அனுப்பி வைக்கப்பட்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. குறிப்பாக இதில் இந்தியர்கள் பலரும் இருந்தனா். இந்த விவகாரத்தில் டொனால்ட் டிரம்ப் யாருடனும் சமரசம் செய்ய போவது இல்லை என்று கூறவிட்டார்.

இதனை தொடர்ந்து ராணுவ உதவியுடன் கட்டாயப்படுத்தி சட்டவிரோத குடியேறிகளை அனுப்பி வருகிறார். மேலும் அமெரிக்காவிற்குள் நுழையும் நபர்களுக்கு பலத்த சோதனை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் அவர் மேற்கொண்டு வருகிறார். இதனால் வெளிநாட்டினர் பலரது அமெரிக்க கனவு, காத்திருப்பு பட்டியலில் உள்ளது. டொனால்ட் டிரம்ப் இதுவரை 1.52 லட்சம் பேரை சட்டவிரோதமாக குடியேறியதாக நாட்டை விட்டு அனுப்பிவிட்டார்.


இந்த நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்துவதற்கு சூப்பர் திட்டத்தை கொண்டு வந்துள்ளார். அதாவது அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி உள்ள நபர், தனது சொந்த நாட்டுக்கு செல்வதற்கு தாமாக முன்வந்தால் அமெரிக்க அரசு சார்பில் 1,000 டாலர் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.85 ஆயிரம் என்று கூறலாம்.
CBP Home செயலியைப் பயன்படுத்தி சுயமாக நாடு கடத்தப்படும் எந்தவொரு சட்டவிரோத வெளிநாட்டினருக்கும் $1,000 உதவித்தொகை வழங்கப்படும். அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவது செயலி மூலம் உறுதிசெய்யப்பட்ட பிறகு அந்த தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அங்கு சட்டவிரோதமாக வசித்து வருபவர் ஒருவரை கைது செய்து, சிறை வைத்து விசாரித்து பின்னர் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க 17 ஆயிரம் டாலர் செலவாகிறதாம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1.50 லட்சம் ஆகும். ஆனால் விருப்பப்பட்டு நாட்டை விட்டு வெளியேறுபவர் ஒருவருக்கு எல்லாம் கூட்டி பார்த்தால் வெறும் 1 லட்சம் ரூபாய் வரை மட்டுமே ஆவதாக கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.