ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ப்ரீத்தி ஜிந்தா! ஏன் தெரியுமா ?
Top Tamil News May 12, 2025 11:48 AM

நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் தனது ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அந்த நேரத்தில் 'முகம் சுளித்து', "புகைப்படங்களுக்கு மறுப்பு" தெரிவித்ததற்காக மன்னிப்பும் கேட்டார். பாதுகாப்பான வெளியேற்றத்திற்கு உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர் தனது ட்வீட்டில், "சில நாட்களுக்குப் பிறகு இறுதியாக வீடு திரும்பினேன். ஐபிஎல் அணிகள், அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் தர்மசாலாவிலிருந்து பாதுகாப்பாகவும், விரைவாகவும், வசதியாகவும் வெளியேற உதவியதற்காக இந்திய ரயில்வே மற்றும் நமது ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு மனமார்ந்த நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

''தர்மசாலாவில் உள்ள மைதானத்தை பாதுகாப்பாகவும் ஒழுங்கான முறையிலும் வெளியேற்றுவதற்கு ஒருங்கிணைப்பு செய்த ஜெய்ஷா, அருண் தூமல், பிசிசிஐ, எங்கள் சிஇஓ சதீஷ் மேனன் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் செயல்பாட்டுக் குழுவினருக்கு மிக்க நன்றி. எல்லாம் மிகச் சிறப்பாகக் கையாளப்பட்டது." மேலும், இறுதியாக, தர்மசாலா மைதானத்தில் இருந்த அனைவருக்கும்--நன்றி, நன்றி, நன்றி'' என்று ப்ரீத்தி ஜிந்தா கூறினார். 

மேலும் ட்வீட்டில் பதிவிட்ட ப்ரீத்தி ஜிந்தா, ''பீதியடையாமல், கூட்ட நெரிசலைத் தவிர்த்ததற்கு. நீங்கள் அனைவரும் அசத்தலானவர்கள். நான் கொஞ்சம் முகம் சுளித்து, அனைவருடனும் புகைப்படம் எடுப்பதற்கு மறுப்பு தெரிவித்ததற்கு மன்னிக்கவும், ஆனால் அந்த நேரத்தில் முன்னுரிமை அனைவரின் பாதுகாப்புதான், மேலும் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வது எனது கடமையும் பொறுப்புமாகும். அதைச் சாத்தியமாக்கியதற்கு நன்றி. உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.