இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த தாக்குதல் போராக மாற இருந்த நிலையில், இருநாடுகளும் சண்டையை நிறுத்தவதாக அறிவித்தன. இந்தியா பாகிஸ்தான் சண்டை நிறுத்த அறிவிப்பு பிறகும் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பாகிஸ்தான் நடத்தும் தாக்குதல்களுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. பாகிஸ்தானின் அத்துமீறல்களை தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என மத்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் எல்லையோர இந்திய மாநிலங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லையோர இந்திய மாநிலங்கள் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. எல்லையில் இரவு முதல் துப்பாக்கிச்சூடு உள்பட
எந்த தாக்குதல் சம்பவங்களும் நடைபெறவில்லை
என இந்திய ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.