“எங்கள விட்டு போயிட்டியே…” மகளின் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர்…. போலீஸ் விசாரணை…!!
SeithiSolai Tamil May 17, 2025 10:48 PM

தர்மபுரி மாவட்டம் பேராளஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கட்டிடம் மேஸ்திரி. இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் இளைய மகள் காசிகா(15) பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் கணித பாடத்தில் தோல்வி அடைந்ததால் மன உளைச்சலில் இருந்தார். நேற்று தனது வீட்டிற்கு அருகில் உள்ள மாட்டு கொட்டகையில் காசிகா திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.