ஆட்டோ மீது அரசுப் பேருந்து நேருக்கு நேர் மோதி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!
Dinamaalai May 23, 2025 01:48 AM

 


 
பெங்களூரில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன். இவரது  மனைவி சுமதி.  இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தனது உறவினரை சந்தித்து விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப ஆட்டோவில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர். அப்போது விஏஓ அலுவலகம் அருகே ஆட்டோ மீது வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து  நேருக்கு நேர் மோதியது.


இதில் சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுனர் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுந்தரவாசனின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த விபத்து சம்பந்தமான  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.