தற்போது தனது வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். இவரது ராஜினாமாவை மத்திய நிதியமைச்சகம் ஏற்று கொண்டது. இந்நிலையில், அரசு பதவியை ராஜினாமா செய்துள்ள அருண் ராஜூக்கு விரைவில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைப் பொதுச்செயலாளர் அல்லது துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி, தற்போது பொதுச் செயலாளராக உள்ள ஆனந்த்க்கு செயல் தலைவர் பதவியும் வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அருண்ராஜ் பாஜக – அதிமுக கூட்டணிக்கு தவெகவை இழுப்பதற்காக முயற்சி மேற்கொள்ளவும், சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிடவும் தனது பதவியை ராஜினாமா செய்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.