தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, தனது அயராத உழைப்பால் கதாநாயகனாக உயர்ந்தவர் நடிகர் சூரி. அவரது சமீபத்திய திரைப்படமான ‘மாமன்’, பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் வெளியாகி, குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுபூர்வமாக எடுத்துரைத்து மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், சூரி தனது வாழ்க்கைப் பயணத்தையும், ரசிகர்களின் அன்பையும் நினைவுகூர்ந்து பேசிய பேச்சு அனைவரையும் உருக்கியது. “பட்டநான் கஷ்டத்துக்கு என்னை இந்த இடத்தில் நிறுத்தி வச்சிருக்கீங்க… இதைவிட மரியாதை எனக்கு எப்பவும் கிடைக்காது,” என்று கண்ணீருடன் பேசிய சூரி, தனது பயணத்தில் ரசிகர்களின் ஆதரவு தான் தன்னை உயர்த்தியது என உருக்கமாகக் கூறினார்
நிகழ்ச்சியில் சூரி தனது பேச்சைத் தொடர்ந்தபோது, “நான் நடக்காத இடம் இல்லை, எங்கெல்லாம் நடந்தேனோ, அங்கெல்லாம் இப்போ என்னைப் பார்க்கும்போது அவ்வளவு கொண்டாடுறீங்க… நீங்க கையை தட்டி, விசில் அடிச்சு என்னை இந்த மேடைக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கீங்க,” என்று ரசிகர்களின் அன்பைப் புகழ்ந்தார். “நீ நில்லுடா, இது உனக்கான மேடைடா, நாங்க உனக்காக இருக்கிறோம்,” என்று ரசிகர்கள் தன்னை உற்சாகப்படுத்துவதாக அவர் கூறியபோது, அரங்கமே உணர்ச்சிவசமானது. இந்தப் பேச்சைக் கேட்டு, படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா லட்சுமியும் கண்ணீர் விட்டார், சூரியின் இந்த உருக்கமான பேச்சு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram