புது இயக்குனர்களுக்கு இது தெரியல… விரைவில் நடவடிக்கை எடுப்போம்… தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா பேட்டி…
Tamil Minutes May 28, 2025 08:48 PM

தனுஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தற்போது வளர்ந்து வரும் பிரபலமான இயக்குனராக இருக்கிறார். இவரது தந்தை கஸ்தூரிராஜா தமிழ் சினிமாவில் பணியாற்றிய இயக்குனர் மற்றும் இவரது சகோதரர் செல்வராகவன் தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் இருந்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் தனுஷ். ஆரம்பத்தில் இவரது தோற்றத்திற்காக மிகவும் கேலி கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் அதையும் தாண்டி தற்போது பல வெற்றி திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார்.

இயக்குனராக தற்போது புது அவதாரம் எடுத்துள்ள தனுஷ் சமீபத்தில் ராயன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அது நூறு கோடி வசூலை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். ஆனால் இது எதிர்பார்த்த அளவு போகவில்லை. அடுத்ததாக தனுஷ் இயக்கத்தில் இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷின் தந்தையும் இயக்குனருமான கஸ்தூரிராஜா புது இயக்குனர்கள் பற்றி ஒரு சில விஷயங்களை கூறியிருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால், இன்றைய புது இயக்குனர்களுக்கு இளையராஜா மற்றும் தேவா போன்று பாடல்களை பண்ண தெரியலை. அதனால் பழஸை எடுத்து யூஸ் பண்ணிக்கிறாங்க. இருந்தாலும் மரியாதைக்கு ஒரு வார்த்தை கூட கேக்கணும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இதற்காக சட்டபூர்வமான நடவடிக்கை விரைவில் எடுத்தாலும் எடுப்போம் என்று கூறி இருக்கிறார் கஸ்தூரிராஜா.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.