ஒரே நாளில் அடுத்தடுத்து 3 முறை தொடர் நிலநடுக்கம்!
Dinamaalai May 29, 2025 01:48 AM

மணிப்பூர் மாநிலத்தின் இரண்டு வெவ்வேறு மாவட்டங்களில் இன்று மே 28ம் தேதி   அதிகாலை முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆராய்ச்சி நிலையம் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளது.  


சூராசந்திரப்பூர் மாவட்டத்தில் அதிகாலை 1.54 மணிக்கு  5.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது பதிவாகியுள்ளது. அதன் பின்னர், நோனே மாவட்டத்தில் அதிகாலை 2.26 மணியளவில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக  கூறப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து, காலை 10.23 மணிக்கு மீண்டும் சூராசந்திரப்பூரில் 3.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தொடர் நிலநடுக்கங்களினால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.