இந்நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 14 காரீப் பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன்படி விலை உயர்த்தப்பட்ட பயிர்கள் விபரம்
( விலை உயர்வு ஒரு குவிண்டாலுக்கு)
நைஜர் விதை - ரூ.820
ராகி( கேழ்வரகு) - ரூ.596
பருத்தி - ரூ.589
எள் - ரூ.579
நெல் - ரூ.69
துவரை பருப்பு- ரூ.450
பாசிப்பயிறு - ரூ.86
கடலை எண்ணெய் வித்து- ரூ.480
சூரியகாந்தி எண்ணை விதை - ரூ.441
சோயா பீன்ஸ் -436 உள்ளிட்ட 14 பொருட்களுக்கு விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: விவசாயிகளுக்காக முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 - 11 ஆண்டுகளில், காரீப் பருவ பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோல், 2025 - 26 பருவத்திற்கும் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தப்பட்டு உள்ளது. இதற்கு மொத்தம் ரூ.2,07,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.