பகீர்... சுற்றுலா சென்ற பெண் திடீர் மரணம்… பிரேத பரிசோதனையில் இதயம் மாயம்!
Dinamaalai May 29, 2025 02:48 AM

 

இங்கிலாந்து நாட்டில் வசித்து வருபவர் பெத் மார்ட்டின் . 28 வயதான இவரது கணவர்  லுக் மார்ட்டின். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள்.   இவர்கள் ஏப்ரல் 27ம் தேதி குடும்பத்தோடு துருக்கி சென்று இருந்தனர். இவர்கள் அங்கு தரையிறங்கிய சில மணி நேரத்திலேயே பெத் மார்ட்டினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு முதலில் அந்த நாட்டின் உணவு ஒத்துக் கொள்ளவில்லை என நினைத்தார். 

உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் அவரது மரணத்திற்கு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே அந்த பெண் உயிரிழந்து விட்டதாக  உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  

அவரது உடலை இங்கிலாந்துக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்த போது இங்கிலாந்து மருத்துவர்கள் அதற்கு முன்பு பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அந்தப் பெண்ணின் உடலில் இதயம் இல்லாதது தெரியவந்தது.  அதனை கண்டு மருத்துவர்கள்  அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மருத்துவர்கள் உறவினர்களிடம் தெரிவித்த நிலையில் பெத் மார்ட்டின் மரணத்தில் துருக்கி  மருத்துவர்கள் உண்மையை மறைப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் இதனை அதிகாரிகள் மறுத்த நிலையில் அவருக்கு எந்தவிதமான அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை எனக்  கூறியுள்ளனர். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.