ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவன் எவ்வளவு தூரம் வாழ்க்கையில் கஷ்டப்படுகிறான். வேலை, கடன் தொல்லை என எப்படி எல்லாம் வரும் கஷ்டங்களை சமாளிக்கிறான் என்பதை தெள்ளத் தெளிவாக குடும்பஸ்தன் படத்தில் சொல்லி இருந்தார் நடிகரும், இயக்குனருமான மணிகண்டன் . குடும்பஸ்தன் படத்தை இயக்கியவர் ராஜேஸ்வர் காளிசாமி. படத்தில் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இப்படிப்பட்ட படங்களை எல்லாம் பார்த்திருக்கவே முடியாது.
அதுவும் பிரம்மாண்டமான பெரிய படங்களை எடுக்கும் காலகட்டத்தில் சின்ன பட்ஜெட்டில் அருமையான கதையை சொல்லி ஹிட் கொடுத்து தமிழ்சினிமா உலகுக்கு ஆரோக்கியமான ஒரு விஷயத்தைக் கொடுத்துள்ளார். அதாவது சின்ன பட்ஜெட் படங்களும் நல்ல அழுத்தமான கதை இருந்தால் வெற்றி பெறும் என்பதை நிரூபித்து விட்டார். இவர் இப்போது ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். அது 100க்கு 100 உண்மை. என்னன்னு பாருங்க.
நீங்க தைரியமா இருந்தாலும் ரொம்ப கஷ்டம். என்னன்னா வீட்ல இருக்குறவங்களை சமாளிப்பதுதான். எங்க அம்மா எல்லாம் தினமும் சாப்பாடு போட்டு வைத்து விட்டு அவனை பாரு. 30 ஆயிரம் ரூபாய் வாங்குகிறானாம்னு அழுவாங்க. நம்ம எப்ப 30 ஆயிரம் வாங்குறது? அவ்வளவுதான் சினிமாவை விட்டுவிடலாம் என்கிற எண்ணம் எனக்கு வந்துடும்.
நீங்க எவ்வளவு உறுதியோடு இருந்தாலும் உங்க உறுதியை உடைப்பதற்கு உங்க வீட்டிலேயே ஆள் இருப்பாங்க. நம்ம அதை எல்லாத்தையும் கடந்து வந்தா நம்ம மனசும் சரி. நம்ம வேலையும் சரி. அடுத்த கட்டத்துக்கு நம்மைக் கொண்டு போயிட்டே இருக்கும் என்கிறார் இயக்குனர் மணிகண்டன்.