தமிழ்த்திரை உலகில் பகுத்தறிவோடு நக்கலும், நய்யாண்டியும் செய்தவர் எம்.ஆர்.ராதா. இவர் நடித்த படங்களில் இவரது டயலாக்கை வைத்தே கண்டறியலாம். ராமாயணம் நாடகத்தை அரங்கேற்றம் செய்தபோது மாட்டுக்கறி கூட சாப்பிட்டுள்ளார். அதனால் கைது செய்யப்பட்டார். எம்ஜிஆர் மீது துப்பாக்கியை வைத்து சுட்டுக் கொலை செய்ய முயன்றார். இப்படி பல சர்ச்சைகள் இவரைப் பற்றி உண்டு.
எம்.ஆர்.ராதா நடித்த ரத்தக்கண்ணீர் படம் அவ்வளவு சூப்பராக இருக்கும். எப்படி இவரால இப்படி எல்லாம் நடிக்க முடியுதுன்னு படம் பார்த்த அத்தனை பேரும் ஆச்சரியப்பட்டாங்க. இந்தப் படத்தை இப்போது பார்த்தாலும் கூட சான்ஸே இல்லை. இது மாதிரி வேற யாராலும் நடிக்க முடியாதுன்னு சொல்லலாம். பக்கா ஜென்டில்மேன், அதே நேரம் தள்ளாடும் தொழுநோயாளி என இருமாறுபட்ட பரிமாணங்களைப் படத்தில் காட்டுவார் எம்.ஆர்.ராதா.
எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அது ஆச்சரியம் மட்டும் அல்ல. வைரலாகி வருகிறது. என்ன சொல்றாருன்னு பாருங்க.
என் தாத்தாவுக்கு 8 பொண்டாட்டிகள். எல்லாரும் 2 கட்டிக்கிட்டே திண்டாடுறாங்க. அதுவும் ஒரே வீட்ல வச்சிப் பார்த்துக்கிட்டாரு. 20 பசங்கள பெத்து ஒரே வீட்டுல வச்சி சமாளிச்சார் 100 பேருக்கு தினமும் சமையல் நடக்கும். 6 கார், 2 வேன் இருந்தது. தாத்தா பிள்ளைகளுக்கு சொத்தை சரி சமமாகப் பிரித்துக் கொடுத்தார்.
திருச்சியில் 43 வீடுகளை ஒரே இடத்தில் கட்டினார். அவற்றை எல்லாம் பராமரிக்க முடியாததால விற்றுவிட்டோம். சித்தப்பா ராதாரவி வீடு தான் எங்களுக்கு ஹெட்ஹோட்டர்ஸ். தாத்தா இறந்த 5 வருஷத்துல அப்பாவும் இறந்துட்டாரு. தாத்தா பற்றி எதுவும் தெரியல. சினிமாவுக்கு வந்த அப்புறம்தான் தெரிஞ்சிக்கிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.