வீடு புகுந்து 10ஆம் வகுப்பு மாணவி கொலை! இளைஞர் வெறிச்செயல்
Top Tamil News May 29, 2025 03:48 AM

ராணிப்பேட்டையில் வீடு புகுந்து 10ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த புலிவலத்தில் வீடு புகுந்த இளைஞர், ஜனனி மற்றும் அவரது உறவுக்கார சிறுமி லக்சயா மீது கத்தியால் குத்தினார். இதில் ஜனனி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  11ம் வகுப்பு மாணவி லக்சயா கடுமையாக தாக்கப்பட்டதில் பலத்த படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இது தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததுடன், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கத்தியால் குத்திய நபரை பிடித்த பொதுமக்கள், காவல்துறையில் ஒப்படைத்தனர்.
 

 
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.