விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சி, பல்வேறு சமூகப் பிரச்சினைகளை விவாதிக்கும் தளமாக விளங்கி வருகிறது. அந்த வகையில், ஆணவக் கொலை குறித்து நடந்த ஒரு நிகழ்ச்சியில், ஒரு பெண்ணின் உருக்கமான பேச்சு அரங்கத்தையே மௌனத்தில் ஆழ்த்தியது.
தனது கணவர், சாதி வேறுபாட்டை மீறி தன்னை திருமணம் செய்ய விரும்பியதாகவும், அவரது குடும்பத்தினர் “ஒன்று சேர்ந்தால் கொல்லப்படுவீர்கள்” என்று எச்சரித்ததாகவும் அந்தப் பெண் கூறினார். ஆனால், என் கணவர் அந்த பெண் “இல்லையென்றால் இறந்துவிடுவேன்” என்று கூறி தைரியமாக திருமணம் செய்து கொண்டு சென்னைக்கு சென்று வாழ்ந்ததாகவும், ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக சொந்த ஊர் திரும்பியதாகவும் உருக்கமாக பகிர்ந்தார்.
“ஒரு நாள் உயிருடன் வாழ்ந்தாலும் வாழ்வோம், இல்லையெனில் மரணத்தை ஏற்போம்” என்று திரும்பிய அவர்களுக்கு, துரதிர்ஷ்டவசமாக, மே 25 அன்று அவரது கணவர் கொல்லப்பட்டார். இந்த பேச்சு, தொகுப்பாளர் கோபிநாத்தையும், அரங்கில் இருந்தவர்களையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.
“நான் இரண்டு வேளை சாப்பிட்டால், அவர் பட்டினி கிடப்பார்,” சாப்டிற்கு வழி இல்லாமல் சொந்த ஊர் நாடி வந்த எங்களுக்கு நேர்ந்த கொடூரம் என்று கூறியபோது, அரங்கம் முழுவதும் மௌனம் நிலவியது. சொந்த ஊருக்கு திரும்பிய பிறகு, அவரது கணவர் வெள்ளிக்கிழமை வீட்டை விட்டு வெளியே சென்று திரும்பவே இல்லை. “அவரை கொன்றுவிட்டார்கள்,” என்று அந்தப் பெண் அழுது பேசியபோது, யாராலும் ஆறுதல் கூற முடியவில்லை.
View this post on Instagram
“>
இந்த நிகழ்ச்சியில் அவர் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டதோடு, கம்யூனிஸ்ட் கட்சியினரும், மாதர் சங்கமும் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும், அவர்களே இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார்.