FLASH: இரண்டே முடிவுதான்… “எங்கயாவது போகணும் இல்லனா உயிரை விடணும்…” ரொம்ப வேதனையில் இருக்கேன்-பாமக கெளரவ தலைவர் ஜி.கே மணி….!!
SeithiSolai Tamil May 31, 2025 07:48 PM

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று அன்புமணி ராமதாஸ் பாமக முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்.

இந்த நிலையில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே மணி செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது கூறியதாவது, பாமகவில் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. உள்கட்சி பிரச்சனையை வெளியே சொல்ல முடியாது. என்னை பற்றி அவதூறாக பேசுகின்றனர். அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

பல ஆண்டுகளாக கட்சிக்காக வேலை பார்த்த நான் பாமக சிதற வேண்டும் என நினைப்பேனா? பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளவில்லை. மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன்.

இதைக் கேட்டு கண்ணீர் விட்டு அழுதேன். ராமதாஸ் அன்புமணி சந்திப்பு நடக்க வேண்டும் என்பதுதான் பாமகவினரின் விருப்பம். பொறுப்பாளர்களை மாற்ற வேண்டாம் என்று வலியுறுத்தியும் மாற்றிவிட்டார். அது ராமதாஸின் விருப்பம். நிகழக்கூடாத சம்பவங்கள் பாமகவில் நடந்து விட்டது.

கட்சி நிலைமை சரியாகவில்லை என்றால் இப்போது இரண்டு முடிவுகளை மட்டுமே எடுத்துள்ளேன். ஒன்று யாருக்குமே தெரியாமல் கண் காணாத இடத்திற்கு போவது அப்படி இல்லை என்றால் உயிரை விடுவது என மன வேதனையுடன் கூறியுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.