தக்லைப் படத்திற்கும் ரூ.25 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும்!
Seithipunal Tamil June 01, 2025 05:48 AM

தமிழில் இருந்து கன்னடம் தோன்றியதாக கமல்ஹாசன் கூறியதையடுத்து, கர்நாடகத்தில் கன்னட அமைப்புகள் நாள்தோறும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது புதியதும் பழையதும் எந்த திரைப்படமும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என கடும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “என் மீது தவறு இருந்தால் நிச்சயமாக மன்னிப்பு கேட்பேன். தவறு இல்லையெனில் மன்னிப்பு கேட்பது என் இயல்பல்ல” என உறுதியுடன் கூறினார்.

2022-ல் வெளியான விக்ரம் திரைப்படம் மட்டும் கர்நாடகாவில் ரூ.12 கோடி வசூல் செய்தது. தற்போது வெளியீட்டுக்கு தயாராக உள்ள தக்லைப் படத்திற்கும் எதிர்பார்ப்பு இருந்தாலும், இந்த கருத்து சர்ச்சையால் அந்தப் படத்தின் வெளியீட்டுக்கு தடை விதிக்கப்படுவதாக கர்நாடக சினிமா வர்த்தக அமைப்புகள் முடிவெடுத்துள்ளன.

இதன் காரணமாக, தக்லைப் படத்திற்கும் ரூ.25 கோடிக்கு மேல் இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. இருப்பினும் சில கன்னட திரையரங்குகள், படம் விரைவில் திரைக்கு வரும் என முன்பதிவு அறிவிப்புகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றன.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.