%name%
பாகிஸ்தான் உடனான மோதலில் நமது விமானங்கள் வீழ்த்தப்பட்டதாக இந்திய ராணுவ அதிகாரி தெரிவித்ததாக ஒரு செய்தி வருகிறது. திரு அணில் சவுகான் ப்ளூம்பெர்க் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியை மேற்கோள்காட்டி பலர் செய்தி வெளியிட்டு வருகிறார்கள்.
“ஜெட் down ஆனதா என்பது முக்கியமில்லை, எதனால் அந்த நிலை ஏற்பட்டது என்பது. அதை சரிசெய்து அடுத்த 2 நாட்களில் அனைத்து விமானங்களையும் மீண்டும் இயக்கினோம்”
அடுத்த கேள்வி – 6 விமானங்கள் வீழ்த்தப்பட்டதா ?
இல்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடுகிறார்.
Down என்றால் வீழ்த்தப்பட்டது என்று பொருள் இல்லை. விமானம் Down என்றால் தரையில் நிற்கிறது (இயக்கப்பட முடியாமல் உள்ளது என்று பொருள்). பல காரணங்கள் இருக்கலாம், பறக்கும் உயரம், வேகம், கொண்டு செல்லும் ஏவுகணையின் எடை அல்லது வேறு காரணம் கூட இருக்கலாம். சேதம் ஏற்பட்டிருக்கலாம், ஆனால் அது சரி செய்யப்பட்டது என்பது தான் நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது.
இதற்கு முன்னரே கூட ‘எங்கள் விமானிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனர்’ என்று நமது ராணுவம் அறிவித்தது, பாகிஸ்தான் கூட ‘இந்திய விமானி யாரும் எங்கள் பிடியில் இல்லை’ என்று கூறியது.
அடுத்த 2 நாட்களில், அதை சரி செய்து ‘அனைத்து விமானங்களையும்’ இயங்கினோம் என்கிறார். அப்படியானால் விமானங்களை இழக்கவில்லை என்பதே பொருள் .
கார், பஸ் பிரேக் டவுன் என்றால் எதோ பிரச்சனை என்று தான் பொருள், வண்டியே போய்விட்டது என்று பொருள் இல்லை.
தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவலின் படி நாம் புரிந்துக் கொள்ள வேண்டியது இது தான்.
ஒருவேளை ஒன்றிரண்டு விமானங்கள் இழந்திருந்தாலும் கூட அது ஒரு பொருட்டு இல்லை. சண்டை என்றால் இழப்புகள் இருக்கவே செய்யும். இறுதி இலக்கை அடைந்தோமா என்பதே முக்கியம்.
இந்தியா விமானம் வீழ்த்தப் பட்டதா ஆப்பரேஷன் சிந்தூரில்?இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து எழுதி வரும் ப்ளூம்பெர்க் chief of defense staff / பாதுகாப்புப் பணியாளர்களின் தலைவர் அனில் சௌஹானை நேர்காணல் கண்டிருக்கிறது சிங்கப்பூரில். அவரிடம், “இந்திய விமானங்களை பாக் வீழ்த்தியதா?” என்று கேட்க அவரும், “இதில் எது முக்கியம் என்றால், விமானம் வீழ்த்தப்பட்டதா இல்லையா என்பதில்லை. எதனால் அவை down (இயக்கப்படவில்லை? வீழ்த்தப்பட்டது?) என்பதே. நாங்கள் எங்கு தவறிழைத்தோம் என்பதை புரிந்து கொண்டு, அதை சரி செய்து, அதன் பிறகு மீண்டும் தாக்கினோம். அத்தனை விமானங்களையும் இயக்கினோம்.” என்று பதிலளித்திருக்கிறார். (கமெண்டில் வீடியோ).
மீண்டும் ப்ளூம்பெர்க், “பாக் 6 விமானங்களை வீழ்த்தியதாகச் சொல்கிறது” என்று கூற, அதற்கு சௌஹான், “முற்றிலும் தவறான தகவல்” என்கிறார்.
அதை விளக்கி ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஹர்ஷா (Harsha Kakar) தன் பதிவில், “இதை ஏன் விமான இழப்பு என்று அழைக்கிறோம்? சௌஹான் தெளிவாகச் சொல்கிறார், ‘நாங்கள் தாக்குதல்களை சந்தித்தோம் (We had hits), எங்கள் தந்திரோபாயங்களை சரிசெய்து மீண்டும் இரண்டு நாட்களில் >அத்தனை< விமானங்களையும் பறக்கவிட்டோம்’ என்கிறார். அதாவது, சில தாக்குதல்கள் ஏற்பட்டன, ஆனால் அவை அவையும் அபாயகரமானவை அல்ல, வீழ்த்தப்படவில்லை.”
*** CDS சௌஹான் சொன்னதைத் தான் முன்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் விமானப்படை தளபதியும் சொன்னார். அலுவல் பாஷை (official communication) என்பது பல நுணுக்கங்களைக் கொண்டது. ‘எந்த விமானமும் வீழ்த்தப்படவில்லை’ என்பதும், ‘அனைத்து விமானங்களும் மீண்டும் பறந்தன’ என்பதும், ‘சில தாக்குதல்களை சந்தித்தோம்’ என்பதும் கணக்கில் கொள்ள வேண்டியது.
*** அரசு அனுமதி இல்லாமல் CDS பேசியிருக்க வாய்ப்பில்லை. சிங்கப்பூர் கூட்டத்தில் CDS பங்கெடுப்பது இதுவே முதல் முறை. எனவே…. இதன் மூலம் மெசேஜ் கொடுக்கப் பட்டிருக்கிறது.
*** CDS தன் பேச்சில், ‘பயங்கரவாதம் ஒடுக்கப்படும்’ என மீண்டும் வலியுறுத்தியிருக்கிறார்.
Why do we term this as loss of aircraft. The CDS’s words were clear. We had hits, rectified our tactics and flew all our aircraft again after two days. It means, some hits, none fatal, none which led to a crash. Denied Pak reports of six aircraft, indirectly terming @CMShehbaz @OfficialDGISPR and some Indian political handles claiming so as liars.
India’s military confirmed for the first time that it lost an unspecified number of fighter jets in clashes with Pakistan in May.
Anil Chauhan, chief of defense staff of the Indian Armed Forces, spoke to Bloomberg TV on Saturday, while attending the Shangri-La Dialogue in Singapore:
News First Appeared in