தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கபட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி பாதையை காலகட்டத்திலேயே கொண்டு தனக்கென்ற பாதையில் சினிமாவில் வலம் வந்தவர் ஜெய்சங்கர். இவர் 1965- இல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மக்களை மகிழ்வித்தும் வந்தார். ஒரு படம் சரியாக அமைய கதை மட்டும் போதுமானதில்லை காதல், காமெடி, சண்டை காட்சிகள் என அனைத்தும் வேண்டும் என்ற விஷயங்களையும் சொன்னவர் ஜெய்சங்கர்.
மேலும், இவர் படங்களில் பல வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகருக்கு இணையாக மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவரை மக்கள் கலைஞர் என்றுதான் அழைத்தார்கள். காரணம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருடைய நடிப்பில் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.
இவர் பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதுதான் இவருடைய தந்தையின் ஆசை. ஆனால், கல்லூரி காலத்தில் தொடங்கிய போதே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் இவர் மேடை நாடகங்களில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார்.
பின் சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி படத்தில் நடிக்க தொடங்கினார். மேலும், முதல் படத்திலேயே டபுள் ரோலில் நடித்த நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். ஆரம்பத்தில் இவர் சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாக போராடினார். பின் ஒரு பிரபலமான நடிகராக மட்டுமில்லாமல் திறமையான கலைஞராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார் ஜெய்சங்கர். இவர் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் பெரிதாக சம்பளத்தை எல்லாம் உயர்த்தி கேட்க மாட்டாராம். சினிமாவில் மட்டும் இப்படி இல்லாமல் இவர் தன்னுடைய வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து கொடுத்து இருக்கிறார்.
இப்படி ஒரு உன்னதமான நடிகர் ஜெய்சங்கர் 2000 ஆம் ஆண்டு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 61 வயதுதான். இறக்கும் வரை இவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் சமூக சேவைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என பெயர் எடுத்த மகா கலைஞன் ஜெய்சங்கரின் 25வது நினைவு நாள் இன்று .