“மாயம் இல்ல… மந்திரம் இல்ல….” 280 கி.மீ வேகத்தில் சென்ற புல்லட் ரயில்…. நாணயத்தை நிற்க வைத்த நபர்…. அடுத்து என்னாச்சு தெரியுமா….? வைரலாகும் வீடியோ….!!
SeithiSolai Tamil June 03, 2025 02:48 PM

பயணிகளுக்கு அதிவேக, சீரான, சுவாரஸ்யமான அனுபவத்தை வழங்கும் சீனாவின் புல்லட் ரயில்கள், உலகமே ஆச்சரியப்படுமளவுக்கு தொழில்நுட்ப முன்னேற்றத்தைக் காண்பிக்கின்றன. சமீபத்தில், சீன புல்லட் ரயிலின் நிலைத்தன்மையை நிரூபிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில், பிரபல பயண வ்லாகர் லவ்ப்ரீத் ஜெக்கி, சீனாவின் சொங்சிங் நகரத்திலிருந்து குவாங்சோவுக்குச் செல்லும் பயணத்தின் போது, ரயிலின் ஜன்னலில் ஒரு ரூபாய் காயினைப் வைத்தார்.

 

View this post on Instagram

 

அசாதாரணமாக, ரயில் 280 கிமீ வேகத்தில் பயணித்தபோதும், காயின் அசையாமலே நின்றது. இந்த பயணம் 1,300 கிமீ தொலைவு கொண்டதாகவும், 6 மணி நேரத்தில் அந்த தூரத்தை கடந்ததாகவும் வ்லாகர் பகிர்ந்துள்ளார்.

ரூ.6,000 செலவில் இரண்டாம் தர புல்லட் ரயில் டிக்கெட் வாங்கியதாகவும், அந்த சீரான சவாரியில் அமெரிக்கனோ காபி உள்ளிட்ட உணவுகளை சாப்பிட்டதாகவும் தெரிவித்தார். இந்த வீடியோவுக்கு வலைதளங்களில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

“சீனா 2050ல் வாழ்கிறது போல இருக்கு”, “1300 கிமீக்கு ரூ.6,000 – முழுமையாக மதிப்புடையது”, “சீனாவில் ரயில்வயிலான அனுபவம் உலகத்திலேயே சிறந்தது” என நெட்டிசன்கள் பதிவிட்டுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.