திருப்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பல் சிகிச்சை எடுத்து கொண்ட எட்டு பேருக்கு மூளை தொற்று உருவாகி உயிரிழந்ததை அடுத்து, அந்த மருத்துவமனை சீல் வைக்கப்பட்டதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில், கடந்த 2023 ஆம் ஆண்டு பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற எட்டு பேர் திடீரென மூளை தொற்றால் உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, மருத்துவமனையை மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மீனாட்சி ஆய்வு செய்த நிலையில், மருத்துவமனைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல் சிகிச்சையின் போது கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால்தான் மூளை தொற்று ஏற்பட்டு எட்டு பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது, அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Edited by Mahendran