பஞ்சாங்கம் ஜூன் 3- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!
Dhinasari Tamil June 03, 2025 04:48 PM

%name%

astrology panchangam rasipalan dhinasari 3 இன்றைய பஞ்சாங்கம் – ஜூன் 03

ஸ்ரீராமஜயம் | ஸ்ரீராம ஜயராம ஜய ஜய ராம

!!ஸ்ரீ:!!

श्री:
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

பஞ்சாங்கம்

வைகாசி~ 20 (3. 6.2025) செவ்வாய் கிழமை.
வருடம் ~ விச்வாவஸு வருடம் {விச்வாவஸு நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாஸம் { ரிஷப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ இரவு 2.06 am வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ {பௌம வாஸரம்} செவ்வாய் கிழமை.
நட்சத்திரம் ~ மறுநாள் காலை 4.54 வரை பூரம் பின் உத்திரம்
யோகம் ~ ஹர்ஷணம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்
ராகு காலம் ~ மாலை 3.00 ~ 4.30.
எமகண்டம் ~ காலை 9.00 ~ 10.30.
நல்ல நேரம் ~ காலை 7.30 to 9.00 am and 4.30 to 5.30 pm
குளிகை ~ மதியம் 12.00 ~ 1.30.
சூரியஉதயம் ~ காலை 5.53
சந்திராஷ்டமம்~ மகரம்
சூலம் ~ வடக்கு.
பரிகாரம் ~ பால்.
ஸ்ராத்ததிதி ~ அஷ்டமி
இன்று ~

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்

स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

இன்றைய (03-6-2025) ராசி பலன்கள் மேஷம்

மேஷ ராசிக்கான பலன்கள்

எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உறவினர்களின் வருகைகள் உண்டாகும். உத்தியோகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் புதுவிதமான கனவுகள் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

அஸ்வினி : குழப்பங்கள் விலகும்.
பரணி : மாற்றமான நாள்.
கிருத்திகை : கனவுகள் பிறக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்கான பலன்கள்

கூட்டாளிகள் வழியில் ஆதரவு ஏற்படும். நண்பர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உங்களின் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்விப் பணிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆக்கப்பூர்வமான நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

கிருத்திகை : ஆதரவு ஏற்படும்.
ரோகிணி : மதிப்பு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்கான பலன்கள்

அக்கம், பக்கம் இருப்பவரிடம் அனுசரித்து செல்லவும். உறவுகள் இடத்தில் விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் அமைதி உண்டாகும். தொழிலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உத்தியோகப் பணிகளில் ஆதரவு கிடைக்கும். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

மிருகசீரிஷம் : அனுசரித்து செல்லவும்.
திருவாதிரை : மந்தத்தன்மை குறையும்.
புனர்பூசம் : முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்

கடக ராசிக்கான பலன்கள்

உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறுதூரப் பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் மேம்படும். புகழ் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூசம் : முடிவு பிறக்கும்.
ஆயில்யம் : ஆதாயம் மேம்படும்.

சிம்மம்

சிம்ம ராசிக்கான பலன்கள்

உறவுகளைப் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பக்தி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

மகம் : சிந்தனைகள் பிறக்கும்.
பூரம் : சேமிப்புகள் மேம்படும்.
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.

கன்னி

கன்னி ராசிக்கான பலன்கள்

கடன் பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் ஒத்துழைப்பு ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திரம் : புரிதல் அதிகரிக்கும்.
அஸ்தம் : பொறுமையுடன் செயல்படவும்.
சித்திரை : ஒத்துழைப்பு ஏற்படும்.

துலாம்

துலாம் ராசிக்கான பலன்கள்

வியாபாரப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவுகள் வழியில் சுபசெய்திகள் கிடைக்கும். விவாதங்களில் சாதகமான முடிவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்

சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : குழப்பம் விலகும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்கான பலன்கள்

சில நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். புதுவிதமான ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். முத்திரைப் பணிகளில் சற்று விவேகம் வேண்டும். அரசு தொடர்பான விஷயங்களில் ஆதாயம் ஏற்படும். மற்றவர்களின் தேவையை நிறைவேற்றி வைப்பீர்கள். வேளாண் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்

விசாகம் : மாற்றம் ஏற்படும்.
அனுஷம் : விவேகம் வேண்டும்.
கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.

தனுசு

தனுசு ராசிக்கான பலன்கள்

எதிர்மறையான சிந்தனைகள் மனதில் மேம்படும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி செயல்படுவதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு நிறம்

மூலம் : சிந்தனைகள் மேம்படும்.
பூராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.
உத்திராடம் : ஆர்வமின்மை உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்கான பலன்கள்

நினைத்த காரியங்களில் அலைச்சல் உண்டாகும். எதிர்பாராத சில வாய்ப்புகள் அமையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வேலையாட்களின் விஷயத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரிகளால் சிறு சிறு நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். விவேகம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்

உத்திராடம் : அலைச்சல் உண்டாகும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : நெருக்கடிகள் நீங்கும்.

கும்பம்

கும்ப ராசிக்கான பலன்கள்

சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். அரசு தொடர்பான காரியங்களில் ஆதாயம் ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதளவில் தெளிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உற்சாகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

அவிட்டம் : ஆதாயம் ஏற்படும்.
சதயம் : எதிர்பார்த்த முடிவு கிடைக்கும்.
பூரட்டாதி : நுட்பங்களை அறிவீர்கள்.

மீனம்

மீன ராசிக்கான பலன்கள்

மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறவுகளின் இடத்தில் பொறுமை வேண்டும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முதலீடு செய்வதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

பூரட்டாதி : பாதைகள் புலப்படும்.
உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரேவதி : ஆலோசனைகள் கிடைக்கும்.

thiruvalluvar deivapulavar தினம் ஒரு திருக்குறள்

அதிகாரம்: புலால் மறுத்தல் | குறள் 254:

அருளல்ல தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல தவ்வூன் தினல்.

மு.வ உரை: அருள் எது என்றால் ஓர் உயிரையும் கொல்லாமலிருத்தல் அருளல்லாது எது என்றால் உயிர்களைக்கொள்ளுதல் அதன் உடம்பைத் தின்னுதல் அறம் அல்லாதது.

தினம் ஒரு திருமுறை

மறை – 1. பதிகம் – 44 பாடல் – 1

44வது பதிக பாடல்கள் அனைத்தும் திருப்பாச்சிலாச்சிராமம் திருத்தலத்தில் பாடல் பெற்றவை ஆகும்

துணிவளர்திங்கள் துளங்கிவிளங்கச் சுடர்ச்சடை சுற்றிமுடித்துப்
பணிவளர்கொள்கையர் பாரிடஞ்சூழ வாரிடமும் பலிதேர்வர்
அணிவளர்கோல மெலாஞ்செய்துபாச்சி லாச்சிரா மத்துறைகின்ற
மணிவளர்கண்டரோ மங்கையைவாட மயல்செய்வதோ விவர்மாண்பே .

விளக்கவுரை :

முழுமதியினது கீற்றாக விளங்கும் பிறைமதியை விளங்கித் திகழுமாறு அதனைத் தம் ஒளி பொருந்திய சடையினைச் சுற்றிக் கட்டி, பாம்புகளை அணிந்தவராய்ப் பூதங்கள் தம்மைச்சூழ எல்லோரிடமும் சென்று பலியேற்பவராய், அழகிய தோற்றத்துடன் விளங்கும் திருப்பாச்சிலாச்சிராமத்தில் உறைகின்ற நீலமணி போலும் கண்டத்தவராகிய இறைவர், கொல்லிமழவன் மகளாகிய இப்பெண்ணை மயல் செய்வது மாண்பாகுமோ?

தினம் ஒரு பாசுரம்

நாலாயிர திவ்யப் பிரபந்தம்

முழுதும் வெண்ணெயளைந்து தொட்டுண்ணும்
முகிழிளஞ் சிறுத்தாமரைக் கையும்,
எழில்கொள் தாம்பு கொண்டடிப்பதற்கு எள்கு நிலையும்
வெண்தயிர் தோய்ந்த செவ்வாயும்,
அழுகையும் அஞ்சிநோக்கும் அந்நோக்கும்
அணிகொள் செஞ்சிறுவாய் நெளிப்பதுவும்,
தொழுகையும் இவை கண்ட அசோதை
தொல்லையின்பத்திறுதி கண்டாளே”

  • குலசேகரப் பெருமாள் அருளிய பெருமாள் திருமொழி
    (கண்ணனது பால லீலைகளைக் காணப்பெறாத தேவகியின் புலம்பல் – 715).

வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்…
தினசரி .காம்

சிந்தனைக்கு..

உன் மனம் தெளிவாக இருக்கும் வரை, உன்னை எவராலும் வீழ்த்த முடியாது; அடுத்த வாய்ப்பு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் அஞ்சாதே!

உன்னால் நேற்றை சரி செய்ய முடியாது, ஆனால் நாளையை உருவாக்க முடியும்; கோபம் ஒரு நிமிட ஆவேசம், ஆனால் அதன் விளைவுகள், வாழ்நாள் பாடம்!!

ஏமாற்றங்கள் பழகிப் போகிறதே தவிர, எதுவும் மறந்து போவதில்லை; கழன்று விழும் வரை, சிலரது முகமூடிகளையும், முகம் என, நீ நம்பி கொண்டிருக்கிறாய்!!!

News First Appeared in

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.