இரவு 11 மணிக்கு தான் வீட்டுக்கு செல்வதற்கு முன்பாக தனிமையில் காதலனை சந்தித்து பேசுவதற்காக பழைய கட்டிடத்திற்கு அழைத்துள்ளார் மாணவி.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த மாணவி (17) தனது தாயாருடன் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் வடசென்னையை சேர்ந்த சாய் (22) எனும் இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டது.
இது நாளடைவில் காதலாக மாறிய நிலையில், காதலன் சாயுடன் அந்த மாணவி எப்போதும் செல்போனில் பேசி வந்தார். அடிக்கடி செல்போன் பார்ப்பதை அவரது தாயார் கண்டித்த நிலையில், மாணவிக்கும், அவரது தாயாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, அதன் பின்னர் தனது தோழி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில் தனது வீட்டுக்கு செல்லலாம் என முடிவெடுத்த மாணவி, வீட்டிற்குச் செல்லும் முன்பு தனது காதலனை தனிமையில் சந்தித்து பேச திட்டமிட்டார்.
இதையடுத்து இரவு 11 மணியளவில், சென்னை கொத்தவால்சாவடி பகுதியில் உள்ள ஒரு பழைய கட்டிடத்திற்கு காதலனை வருமாறு மாணவி அழைத்அங்கு வந்த காதலன், மாணவியை சந்தித்து பேசிக் கொண்டு இருந்தார்.
இடிந்து விழும் நிலையில் உள்ள பழைய கட்டிடம் என்பதால் கட்டிடத்தில் யாரும் வசிக்கவில்லை. அந்நேரத்த்தில் சாயின் நண்பர்கள் ராகுல் (26) உள்ளிட்ட 2 பேர் மோட்டார் சைக்கிளில் அந்த கட்டிடத்திற்கு வந்தனர்.
பின்னர் திடீரென்று சாயும், அவரது நண்பர்களும் 2 பேரும், மாணவியை கட்டிடத்திற்குள் அழைத்து சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றனர். மாணவியின் அலறல் சப்தம் கேட்டு இதைப் பார்த்த அந்த பகுதி மக்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக துறைமுகம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் 3 வாலிபர்களும்அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து மாணவியிடம் போலீசார் விசாரித்தபோது, “3 பேரும் மாணவியிடம் தவறாக நடக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி மற்றும் அவரது தாயார்" ஆகியோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் தப்பியோடிய சாய் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.