மகனின் திருமணம்.. அழைப்பிதழ் கொடுக்க சென்ற தம்பதி… பட்ட பகலில் நடந்த கொடூர சம்பவம்… சோகத்தில் உறவினர்கள்…!!
SeithiSolai Tamil June 04, 2025 03:48 AM

உத்திர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் குப் சிங்(62)- லலிதேவி(56) தம்பதியினர். இவர்களது மகனுக்கு வருகிற 9-ம் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதனால் இருவரும் மகனின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றனர்.

அழைப்பிதழ்களை கொடுத்துவிட்டு இருவரும் இருசக்கர வாகனத்தில் நாகினா- தாம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று இவர்கள் இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.

இதனால் தம்பதியினர் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டு உடனடியாக அருகில் இருந்த சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று தம்பதியினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.