சண்டை போட்ட காளைகள்….! “முதியவரை முட்டி தூக்கி வீசி….” அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. பதைப்பதைக்கும் வீடியோ….!!
SeithiSolai Tamil June 04, 2025 03:48 AM

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவின் சுபாஷ் நகர் பகுதியில் நடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 85 வயதுடைய தேவகரன் குர்ஜார் என்ற முதியவர் சுபாஷ் நகர் பகுதியில் இருக்கும் கடை அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது இரண்டு காளைகள் சாலையில் சண்டை போட்டுக் கொண்டிருந்தது. அதில் ஒரு காளை வேகமாக வந்து முதியவரை முட்டி தூக்கி வீசியது. இதனால் படுகாயமடைந்த முதியவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சாலையோரம் சுற்றி திரியும் மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கே அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முதியவரை காளை தாக்கிய வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.