உத்தரப் பிரதேச மாநிலத்தில் நொய்டாவில் ரத்தம் வழிந்த நிலையில் இருந்த இளைஞரை, வேகமாக வந்த தார் கார் ஒன்று மோதித் தள்ளியது. அதிர்ஷ்டவசமாக அந்த இளைஞர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலில் குதித்து தப்பித்தார். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் செக்டர் 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட செக்டர் 53 பகுதியில் நடந்தது. 28 விநாடிகள் நீளமான அந்த வீடியோவில், முகத்தில் ரத்தம், கழுத்தில் படுகாயங்களுடன் இளைஞர் ஒருவர் இருக்கிறார். அவரது சட்டை முழுவதுமாக கிழிந்துள்ளது. காரில் வந்தவர்களுடன் முன்னதாக சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு அந்த அவரை காரை ஏற்றி கொலை செய்ய முயற்சிக்கின்றனர்.
அந்த சிசிடிவி காட்சிகளில் ஒருவர் நடந்து செல்வதையும், பின்னால் அதிவேகமாக வந்த கருப்பு தார் காரும் தெளிவாக தெரிகின்றன. அந்த கார் நேராக அந்த இளைஞரை மோதும் போது, அவர் குதித்து தாரின் பானட்டில் விழுகிறார். பின்னர் சாலையின் ஓரத்தில் இருந்த வடிகாலுக்குள் விழுந்து தப்பி விடுகிறார். இந்த சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால், அந்த இளைஞர் காரின் அடியில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்திருக்கக்கூடும்.
இது குறித்த வீடியோ குறித்து போலீசார் இதை முக்கியமான ஆதாரமாக எடுத்துக்கொண்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர். காரில் வந்த குற்றவாளிகளை கைது செய்வதற்காக போலீசார் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.