பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்டியா கூட்டணி கடிதம்..!
Top Tamil News June 04, 2025 03:48 PM

இன்டியா கூட்டணியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் டெல்லியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்து கூட்டம் நடத்தினர். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, மற்றும் சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டன.


 பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் இன்டியா கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்தக் கடிதத்தில் தி.மு.க.வும் கையெழுத்திட்ட நிலையில், நேற்று (ஜூன் 3) கருணாநிதியின் பிறந்த நாள் கொண்டாட்டம் காரணமாக கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

 கூட்டம் குறித்து திரிணமூல் காங்கிரஸின் டெரிக் ஓ பிரைன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி 16 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளன. பூஞ்ச், உரி, ரஜோரி மற்றும் பாராளுமன்றத்தில் சுதந்திரமாக விவாதிப்பது குறித்து கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு பாராளுமன்றத்துக்கு பொறுப்பு. பாராளுமன்றம் மக்களுக்கு பொறுப்பானது. அதனால்தான் நாங்கள் பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.