பாஸ்போர்ட் விண்ணப்பிக்கு போறீங்களா ? இனி திருமண சான்றிதழ் தேவையில்லை..!
Newstm Tamil June 04, 2025 03:48 PM

மத்திய வெளியுறவுத்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது, வாழ்க்கை துணைவர் பெயரை பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டுமா? இல்லையெனில் நீக்க வேண்டுமா? அதற்கு திருமணச் சான்றிதழ் அவசியம் எனக் கூறப்பட்டிருந்தது. தற்போது அதில் மாற்றம் வந்திருக்கிறது.

அதன்படி, திருமணச் சான்றிதழுக்கு பதிலாக 'இணைப்பு J" என்ற எளிமையான பிரமாணப் பத்திரத்தை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த படிவத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர் பெயர், இருப்பிடம், வாழ்க்கை துணைவர் பெயர் ஆகிய விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்க்கை துணைவருடன் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை ஒட்ட வேண்டும். அதாவது, கணவன் - மனைவி இருவரும் சேர்ந்தது போன்ற புகைப்படத்தை ஒட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு விண்ணப்பதாரரின் கையெழுத்து, கணவன் அல்லது மனைவியின் கையெழுத்து போட வேண்டும்.

அதன்கீழ் பெயர், ஆதார் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண், பாஸ்போர்ட் எண் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை பதிவிடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பாஸ்போர்ட் பெறுவதற்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் பாஸ்போர்ட் கேந்திரா சேவா அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
 

பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு தேவையான ஆவணங்கள்
  • ஆதார் அட்டை
  • பான் கார்டு, 10வது, 12வது, டிகிரி மார்க் ஷீட் (ஆதார் அட்டை தகவல்கள் சரியாக இல்லையெனில் பயன்படுத்தலாம்)
  • பாஸ்போர்ட் சைஸ் போட்டோ
  • விண்ணப்பிக்கும் நபர்கள் அருகிலுள்ள இரண்டு வீடுகளில் வசிப்போரின் பெயர், முகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றை வழங்க வேண்டும்.
  • வயது வாரியாக பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு கட்டணம் செலுத்த வேண்டும்.
  பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி
  • அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு (https://www.passportindia.gov.in/psp) செல்ல வேண்டும்
  • பயனாளர்கள் Username, Password உடன் தனி கணக்கை தொடங்க வேண்டும்.
  • பாஸ்போர்ட்டிற்கான அனைத்து கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.
  • தேவையான அனைத்து சான்றிதழ்களையும் விண்ணப்பதாரர் கையெழுத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அருகிலுள்ள மாவட்ட தலைமை பாஸ்போர்ட் அலுவலக பெயரை குறிப்பிட வேண்டும்.
  • நேர்காணலுக்கான தேதி, நேரத்தை பதிவிட வேண்டும்.
  • உரிய நாளில் நேரில் சென்றால் புகைப்படம் எடுத்து கொண்டு கையொப்பம் பெறுவர்.
  • அதன்பிறகு போலீசில் இருந்து நேரடியாக வந்து விசாரிப்பர். வழக்குகள் ஏதும் இல்லை என்று தெளிவுபடுத்தி கொள்ள வேண்டும்.
  • போலீசார் பாஸ்போர்ட் வழங்கலாம் என உறுதிப்படுத்தி கையெழுத்து வங்கி கொள்வார்.
  • அதன்பிறகு தபால் மூலம் வீட்டிற்கே பாஸ்போர்ட் வந்துவிடும்.
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.