RCB வெற்றி…. கிங் கோலியை அர்சிபி அணிக்கு எடுத்ததை பெருமையாக உணர்ந்தேன்… முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா…!!!
SeithiSolai Tamil June 04, 2025 03:48 PM

18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர் சி பி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர், குருனால் பாண்டியா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்நிலையில் ஆர் சி பி அணி சாம்பியன்ஸ் உலக கோப்பையை வென்றது. இது குறித்து ஆர்சிபி முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா கூறியதாவது, நான் முதலில் ஆர் சி பி அணியை நிறுவிய போது கோப்பை வெல்ல வேண்டும் என்பதுதான் கனவாக இருந்தது. இளைஞராக இருந்த கிங் கோழியை எடுத்ததை பெருமையாக உணர்ந்தேன்.

அவரும் 18 ஆண்டுகளாக இதே அணிலேயே இருந்து விட்டார். ஒரு வழியாக பெங்களூரு அணிக்கு கோப்பை கிடைத்துவிட்டது கனவை நினைவாக்கி அனைவருக்கும் நன்றி. ஆர்.சி.பி ரசிகர்கள் தான் சிறந்தவர்கள் அவர்கள் நிச்சயம் இந்த கோப்பைக்கு தகுதியானவர்கள் என்று கூறியுள்ளார்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.