பாங்காக்கில் இருந்து திருச்சிக்கு வந்த பயணிகளிடம் சோதனை செய்தபோது போதைப்பொருள் கடத்தி வந்தது தெரியவந்தது. சிங்கப்பூர் வழியாக வந்த விமானத்தில் சுமார் 9.82 கிலோ ஹைட்ரோபோனிக் என்ற உயர் ரக போதை பொருள் கடத்தி வரப்பட்டது.
இந்தப் போதை பொருட்களின் மொத்த மதிப்பு 10 கோடி இருக்கலாம் என கூறப்படுகிறது. போதை பொருள் கடத்திய பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது இருவரும் சிங்கப்பூர் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்தது தெரியவந்தது.
அவர்களின் உடமைகளை சோதனை செய்தபோது அதில் அரிய வகை பல்லி இரண்டு இருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் போதைப்பொருள் கடத்திலில் ஈடுபட்டவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே வெளிநாடுகளில் இருந்து இந்தி…