“சாட்சி சொல்லுவியா…?” பாலியல் வழக்கு தொடர்பாக சாட்சி சொல்ல சென்ற நபர்… கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்… போலீசார் அதிரடி…!!
SeithiSolai Tamil June 05, 2025 04:48 AM

திருநெல்வேலி மாவட்டம் வீ.கேபுரம் சேர்வலார் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(31). இவர் மீது பாலியல் தொடர்பான வழக்கு ஒன்று உள்ளது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் மாடசாமியின் வீட்டருகே வசிக்கும் அசோக்குமார்(47) மாடசாமி மீதான வழக்கில் சாட்சியாக ஆஜராக உள்ளார். எனவே அசோக்குமாரை பார்க்கும் நேரமெல்லாம் மாடசாமி அவரை சாட்சி சொல்ல கூடாது என கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் அசோக் குமார் தன்னுடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது மாடசாமி அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்பு இருவருக்கும் தகராறு முற்றி மாடசாமி அசோக்குமாரை தகாத வார்த்தைகளால் பேசி கல்லால் தாக்கியுள்ளார். இதனால் அசோக் குமாருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அசோக் குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பெயரில் போலீசார் மாடசாமியை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.