இதையும் விட்டு வைக்க மாட்டீங்களா… காற்றாலையில் பயன்படுத்தப்படும் இரும்பு பிளேட்களை திருடிய 3 பேர்… போலீசார் நடவடிக்கை…!!
SeithiSolai Tamil June 05, 2025 04:48 AM

திருநெல்வேலி மாவட்டம் மானூர் வாகைக்குளத்தில் காத்தாடி கம்பெனி ஒன்று அமைந்துள்ளது.அங்கு கயத்தாறு உசிலங்குளம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி(45) என்பவர் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த 30 -ம் தேதி கம்பெனியில் வேலைகள் சரியாக நடக்கிறதா என்று சூப்பர்வைஸ் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது காற்றாலைக்கு மாற்ற வேண்டிய 15 இரும்பு கனெக்சன் பிளேட்டுகள் காணவில்லை. இதுகுறித்து கருப்பசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கம்பெனியில் வேலை பார்க்கும் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மோசை(43), முத்துக்கனி(38), முருகன்(54) ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இரும்பு பிளேட்டுகளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.