சமூக வலைதளங்களில் தினமும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு பாம்பு வீட்டிற்குள் நுழைந்து மேசை மின்விசிறியை சுற்றிக் கொள்கிறது. மேசை விசிறியின் இறக்கைகளை சுற்றி சுருண்டுவிட்டது. வீடியோவை எடுக்கும் நபரின் குரல் பயத்துடன் ஒலிக்கிறது.
மக்கள் அதை அகற்றாமல், முதல் முறையாக பார்த்த அதிசயமாக வீடியோ எடுக்கிறார்கள் என்பதிலேயே சிலர் சிரிப்பும், சிலர் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவின் பின்னணியில் குழந்தைகளும் இருப்பதை பார்க்க முடிகிறது. நெட்டிசன்களில் ஒருவர், “விசிறியின் குளிர்ச்சிக்காக வந்திருக்கும்” என பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “பாம்பு மந்திர சக்தியால் விசிறியை இயக்க வர்றதா?” என பதிவிட்டுள்ளார்.“இதை வீடியோ எடுக்காமல் உடனே பாதுகாப்பு மையத்தை அழைத்து நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே?” எனக் கூறியுள்ளார்.