ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!
WEBDUNIA TAMIL June 07, 2025 07:48 PM

சமீபத்தில் பேட்டியளித்த தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, கடலூரில் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தான், கூட்டணி குறித்த முடிவை அறிவிப்பதாகக் கூறினார்.

ஆனால் பாஜக வட்டாரங்கள், "தேமுதிக கெடு விதித்துள்ளதாகவும், ஜனவரியில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிட்டால், தேர்தலுக்குள் தொண்டர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது கடினமாகும்" என்றும், "கூட்டணியை உடனடியாக அறிவிக்க வேண்டும்" என்றும் அழுத்தம் கொடுத்து வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் தேமுதிக தரப்பில், பாஜக மேலிடத்திலிருந்து தங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்படுவது போல தெரிகிறது. அது மட்டும் இல்லை; திமுக கூட்டணியில் சேரவும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

தேமுதிகவை சேர்க்க திமுகவுக்கு விருப்பமில்லையென்றாலும், விஜயகாந்த் ஆதரவாளர்களை இழுக்கும் நோக்கில் சில சீட்டுகள் கொடுத்து கூட்டணியில் சேர்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் தான் பாஜக, தேமுதிக மீது அழுத்தம் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. தேமுதிக என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.