சமூக வலைதளங்களில் தற்போது பரவலாக பரவி வரும் ஒரு வீடியோவில், பார்வையற்ற ஒரு பெண் ஆட்டோவில் பயணித்து, தனது செல்ல வேண்டிய இடத்தில் சரியாக இறங்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. அந்த பெண், தனது பைகளை தேடிக்கொண்டிருந்தபோது, ஆட்டோ டிரைவர் உதவுகிறார். பின்னர், பயண கட்டணம் குறித்து அவர் கேட்டபோது, “ஏழுபது ரூபாய்” என்று கூறுகிறார். அந்தப் பெண்ணுக்கு கண்பார்வை தெரியாததால் அதனை பயன்படுத்தி அந்த ஓட்டுனர் அந்த பெண்ணை ஏமாற்றும் முயற்சி செய்தார்.
அந்த பெண் பையிலிருந்து 500 ரூபாய் மற்றும் 100 ரூபாய் நோட்டுகளை எடுத்து, “எது 500? எது 100?” என கேட்டபோது, டிரைவர் தவறாக சொல்ல முயன்றார். ஆனால், அந்த பெண் தனது புத்திசாலித்தன்மையை காட்டி, உண்மையான 500 ரூபாயை பையில் வைத்து, 100 ரூபாயை டிரைவரிடம் கொடுத்து மீதத்தை திருப்பிக்கொடுக்க கேட்டார். இதனால், டிரைவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இந்த வீடியோ abramputtan என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு, 22,000-க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது. “இந்த வீடியோ எங்களை பெரிதும் பாதித்தது” என பலர் பகிர்ந்து வருகின்றனர். மேலும் இந்த வீடியோ குறித்து பலரும் தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
View this post on Instagram