விருத்தாசலம் அருகே லாரி மீது ஆம்னி பேருந்து ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 10 பேர் படுகாயமடைந்தனர்.
சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த ஆம்னி சொகுசு பேருந்து ஒன்று உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் முன்னால் லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
இந்நிலையில் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, முன்னால் சென்றுக் கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எதிர்பாராதவிதமாக 10 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து காரணமாக பாலத்தின் மேல் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டதால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் மெதுவாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன். இதனால் சிறிது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.