குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 252 பேர் பயணம் செய்துள்ளனர். அனைவருமே இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் விமான விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ்(40) என்பவர் உயிர் தப்பினார். ரத்த காயங்களுடன் விஷ்வாஸ் பதற்றமாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
மேலே எழும்பிய சில நொடிகளில் பலத்த சத்தம் கேட்டதுடன் விமானம் கீழே விழுந்தது. கண்விழித்து பார்க்கும்போது சுற்றிலும் சடலங்கல் கிடந்தன. பயத்தில் எழுந்து ஓடினேன் என மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷ்வாஸ் குமார் ரமேஷ் கூறியுள்ளார்.