வெற்றிமாறனை பொறுத்தவரைக்கும் குறுகிய காலத்தில் ஒரு படம் பண்ண வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் விடுதலை 2 படமும் சரியாக போகவில்லை. அதனால் கமர்சியலாக ஒரு ஆடுகளம் அல்லது வடசென்னை மாதிரி பொல்லாதவன் மாதிரி கமர்சியலாக ஒரு படம் பண்ண வேண்டும் என ஒரு பிளான் பண்ணி கொண்டிருக்கிறார். இதற்கிடையில் சிம்புவுடன் இந்த கூட்டணியால் அவருடைய பிளான் இதில் ஒர்க் அவுட் ஆகும் என தெரிகிறது.
தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக டீ ஏஜிங் வேலைக்காக சிம்பு லண்டன் போயிருந்தார். பிளான் பண்ண மாதிரி ஜூன் 16ஆம் தேதி வெற்றிமாறனுடனான படத்தின் ப்ரோமோ சூட்டிங் நடக்க வேண்டும் என்ற ஒரு திட்டம் இருந்தது. அதனால் லண்டனில் இருந்து வந்து இறங்கியதும் இந்த ப்ரோமோ சூட் ஆரம்பிக்கப்பட்டது. ப்ரோமோவா அல்லது அது படத்தின் ஷூட்டிங்கா என்று தெரியாத அளவுக்கு 150 ஆர்டிஸ்ட்களை வைத்து அந்த ஷூட்டிங் நடத்தினார்கள்.
படத்தின் ப்ரோமோ சூட் முடிந்த பிறகு இந்த படத்தின் அறிவிப்பு இந்த மாத இறுதியில் வரப்போகிறது. படத்தின் ஸ்டில்லை பார்க்கும் பொழுதே 90ஸ் காலகட்டத்தில் நடக்கும் மாதிரியான கதையாக தான் இருக்கும் .இந்த படத்தில் கிஷோர், சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா என வடசென்னை படத்தில் இருந்த டீம் அப்படியே இருக்கிறார்கள். அவர்கள் போக நெல்சன் ஒரு கேரக்டர் நடித்துக் கொண்டிருக்கிறார்.
கவின் இந்த படத்தில் ஒரு கேமியோ ரோலில் வரப்போவதாக தெரிகிறது. அடுத்த மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகிறது. இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவெனில் படத்தின் கதை. வட சென்னை படத்தில் ராஜனின் கேரக்டர். ராஜன் கேரக்டருடைய சின்ன வெர்ஷன் கதாபாத்திரம். அந்த ராஜன் 18 வயதிலிருந்து 25 வயதிற்குள் இருக்கிற பொழுது என்னெல்லாம் செய்தார்?
அவர் செய்த சேட்டைகள், ராஜன் அந்த சமூகத்தில் எப்படி ஒரு பெரிய மனிதனாக உருவானார் என்பதை பற்றிய கதை, இதை ஏற்கனவே ராஜன் வகையறா என்ற பெயரில் கென் கருணாஸை வைத்து வெப் சீரீஸாக எடுக்க திட்டமிட்டு இருந்தார்கள் .ஆனால் அந்த கதையை தான் இப்பொழுது சிம்புவை வைத்து படமாக எடுக்கப் போகிறார் வெற்றிமாறன் என இந்த சுவாரசிய தகவலை பிரபல பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்திருக்கிறார்.