கேரள மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு, வயநாடு, பட்டணம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
பெய்து வரும் தொடர் மழை காரணமாக சில இடங்களில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அப்பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் காசர்கோடு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் அப்பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை அலுவலகம் பொதுமக்கள் கண்முன்னே இடிந்து விழுந்து தரைமட்டமானது.
அதனை அப்பகுதியில் நின்றிருந்த மக்கள் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
குறிப்பாக அந்த அலுவலகத்திற்கு தினமும் கேரம் விளையாட குறைந்தது 10 பேர் வந்து செல்வதுண்டு. ஆனால் விபத்து அன்று யாரும் செல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.