காரும் வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!
Dinamaalai June 20, 2025 02:48 AM


கரூர் மாவட்டம், நொய்யல்  வளையாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் 20 வயது ஆகாஷ். மதுரையில் இருந்து கரூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காந்திகிராமம் பகுதியில் வசித்து வரும்  துரைப்பாண்டியன்,   ஈரோடு மாவட்டம்  ராம்குமார் (38), திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த வெள்ளைப்பட்டி  பிச்சைமுத்து (52), கரூர், காந்திகிராமத்தை சேர்ந்த சரவணன் (46), கரூர் மாவட்டம், தலையூர் ஜெகநாதன்  ஆகியோருடன் ஆம்னி வேனில் சென்று கொண்டிருந்தார்.  


இன்று அதிகாலை  அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவு அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, திருச்சி மாவட்டம், பெட்டவாய்த்தலை பகுதியில் வசித்து வருபவர்  விஜய்.

 திருச்சி அடுத்த ஜீயபுரத்திலிருந்து, கேரளா செல்வதற்காக கனரக வேனில் வாழைத்தார் லோடு ஏற்றிக்கொண்டு அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவில் பிரிவு அருகே வந்த போது ஆம்னி காரில் மோதி விபத்து ஏற்பட்டது.  இதில் ஆம்னி கார் மற்றும் கனரக வேனில் பயணம் செய்த 7  பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அனைவரையும் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து   போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.