சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான VK முத்துசாமி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பதிவில் “ உச்சநீதிமன்ற நீதியரசர் திரு. M.M. சுந்தரேஸ் அவர்களின் தந்தையாரும், உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான, திரு. V. K. முத்துசாமி அவர்கள் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். பாசமிகு தந்தையை இழந்து வாடும் நீதியரசர் திரு. M. M. சுந்தரேஸ் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தாருக்கும், நீதித்துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த மூத்த வழக்கறிஞர் திரு. V.K. முத்துசாமி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் ” என பதிவிட்டுள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது