ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்துக் கொண்ட சோகம்!
Dinamaalai June 20, 2025 02:48 AM

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சந்திரத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம்மாள் (65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள் பவித்ரா (28) என்பவருக்கும் கரூர் மாவட்டம் பள்ளபட்டி அருகே உள்ள செளந்தபுரம் பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இதனிடையே கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு மாதமாக சின்ன குழிப்பட்டியில் உள்ள தாயார் காளீஸ்வரியுடன் பவித்ரா வசித்து வந்தார். இந்நிலையில் பள்ளபட்டியைச் சேர்ந்த ஒருவருடன் பவித்ராவுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த நபருடன் நேற்று மாலை 6 மணியளவில் பவித்ரா வீட்டை விட்டுச் சென்று விட்டார்.

இதனால் அவமானம் அடைந்த பாட்டி செல்லம்மாள், அவரது மகள் காளீஸ்வரி ஆகிய இருவரும் பேத்திகளான லித்திக்ஸா(7), தீப்தி (5) ஆகிய இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பர் என சந்தேகிக்கிப்படுகிறது.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற இடையகோட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நான்கு பேரின் உடல்களையும் மீட்டு உடல்கூறாய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.