சோகம்... பக்கெட் தண்ணீரில் மூழ்கி 1½ வயது குழந்தை உயிரிழப்பு!
Dinamaalai June 20, 2025 02:48 AM


தூத்துக்குடியில் வீட்டில் விளையாடியபோது தண்ணீர் நிரப்பிய வாளியில் மூழ்கி 1½ வயது குழந்தை பரிதாபமாக இறந்தது.

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் 2-வது தெருவை சேர்ந்தவர் நாகராஜ். மீனவரான இவருடைய மனைவி முத்துராணி. இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உண்டு. இதில் 2-வது குழந்தை மகிஷா (1½). கடந்த 15-ந் தேதி வீட்டில் குழந்தை விளையாடிக் கொண்டு இருந்தது. அப்போது, வீட்டில் ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அதன் அருகே விளையாடிய குழந்தை மகிஷா எதிர்பாராதவிதமாக தண்ணீர் வாளிக்குள் விழுந்தது. இதில் மூழ்கிய குழந்தை உயிருக்கு போராடியது. இதை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக குழந்தையை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை மகிஷா நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து தாளமுத்துநகர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதுதொடர்பான புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் அருளப்பன் விசாரணை நடத்தி வருகிறார். தண்ணீர் நிரப்பிய வாளியில் மூழ்கி 1½ வயது குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.